Saturday, September 21, 2013

SUNDRAPANDIAN REKKAI MULAITHEN song lyrics in tamil

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன்வா என்று
வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்து
போகத் துடித்தாய்
உடன் யாருமில்லாத தேசம் தேடிப்பிடித்தேன்

எனக்கென பதுக்கிய கனவுகள் முதன்முறை
தரைவிட்டு பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய நினைவுகள் முதன்முறை
உயிர்வந்து துடிக்குது உன்னாலே
எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே
எத்தனைப் பக்கம் வந்தாலும்
வெக்கமே இல்லை உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறுமுறை

ரெக்கை விரித்தே
ரெக்கை விரித்தே
உனை உடன்வா என்று
வானம் ஏற அழைத்தாய்
தப்பித் தொலைந்து
போகத் துடித்தேன்
உடன் யாருமில்லாத தேசம் தேடிப்பிடித்தாய்

பகலிலே சுவரை விரித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன்
எல்லாம் உன்னாலே

இரவிலே தூக்கம் தொலைத்தேன்
படுக்கையைச் சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன்
எல்லாம் உன்னாலே
கட்டம் போட்ட ஒன்றா
இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்தச் சட்டை போட
இடம் ஒட்டிக் கொண்டேன் உன்னாலே

பச்சை வண்ணப் பொட்டா
இல்லை மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றிமேலே ரெண்டு நான் ஒட்டிக்கொண்டேன் உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறுமுறை

கவிதைகள் கிறுகிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எரிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே
காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே

சாலையோரத் தேநீர்
அது கோப்பை ரெண்டு வேண்டாம்
தேரும் பேரும் போதும்
இனி திக் திக் ரெண்டு வேண்டாமே

பாறை மேலே ஏறி நம் பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற இனி
அச்சம் ஏதும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறுமுறை

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன்வா என்று
வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்து
போகத் துடித்தாய்
உடன் யாருமில்லாத தேசம் தேடிப்பிடித்தாய்

இனி இனி தனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி மனதில் தேக்கிட காதல்
உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
ஓரக்கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறுமுறை


No comments:

Post a Comment