Thursday, September 26, 2013

J K Ennum Nanbanin Vaazhlkaai -Uyire Uyire song lyrics in tamil

உயிரே உயிரே
நீ வந்தது
ஏனென்று தெரியாதே
உயிரே உயிரே
நீ போவது
எங்கென்று புரியாதே
எதுவும் எதுவும்
நம் கையில்
நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன்
தன் அறிவில்
வெல்லவும் இயலாதே
நாளை என்ன
ஆகும் என்று யாரும்
சொல்ல முடியாதே
நாகரிக வாழ்விலுள்ள
மோகம் மட்டும்
குறையாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உண்மையென்று ஆகாதே
காணபோகும்
மாற்றம் என்ன
யூகம் செய்யக்
கூடாதே
ஹே.....
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே

காலை வேளையில
தோன்றும் சூரியன்
மாலை ஆனதும்
சாய்ந்து தூங்குதே
மாலை வேளையில்
தோன்றும் சந்திரன்
காலை வந்ததும்....
தேய்ந்து நீங்குதே
காணும் யாவுமே
அவ்வாறே
மாறுகின்றதே மண்மேலே
மாறிடாமலே போனாலே
நாம் ஏது
காதல் கொள்வது தீங்கானால்
காமம் வந்தது எவ்வாறு?
தேவையானதை தேடாமல்
வாழ்வேது..........
ஹேய் ஹே ஹே............
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே

எல்லைக் கோடுகள் ...
நூறு உள்ளன....
எந்தக் கோட்டிலே....
நாமும் நிற்பதோ...
பள்ளம் மேடுகள்....
பாதை ஆகின
எந்த பாதையில்
நாமும் செல்வதோ
யாரும் அற்ற ஒரு தீவைப்போல்
நாமும் வாழ்வது தான் நன்றாகும்
ஒன்று கட்டிய ஊர்தானே
பூலோகம்
யாரும் யாரையும் சாராமல்
வாழ்வை வெல்வது ஆகாதே
தனித்து வாழ்வதில்
உன் ஜென்மம்
தீராதே.......
எய் எய் எய்......
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே

உயிரே உயிரே
நீ வந்தது
ஏனென்று தெரியாதே
உயிரே உயிரே
நீ போவது
எங்கென்று புரியாதே
எதுவும் எதுவும்
நம் கையில்
நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன்
தன் அறிவில்
வெல்லவும் இயலாதே
நாளை என்ன
ஆகும் என்று யாரும்
சொல்ல முடியாதே
நாகரிக வாழ்விலுள்ள
மோகம் மட்டும்
குறையாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உண்மையென்று ஆகாதே
காணபோகும்
மாற்றம் என்ன
யூகம் செய்யக்
கூடாதே
ஹே.....


No comments:

Post a Comment