Thursday, September 26, 2013

J K Ennum Nanbanin Vaazhlkaai - Nee Enna Pesuvaai song lyrics in tamil

நீ என்ன பேசுவாய்
என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன்
உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம்
நம் மௌனம் அறியும்
அந்த மௌனம் கோடி
பாஷை பேசுமே........
உலகத்திலே
சிறந்த மொழி........
நீ பேசும்
மௌன மொழி......
நீ என்ன பேசுவாய்
என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன்
உன் இதயம் அறியும்

ரயில் ஓடும் வழியோடு
ஒரு பூச்செடி தான்
என் வாழ்க்கை
வெயிலோடும் மழையோடும்
அதைக் காத்திட
வந்தது உன் கை
நதியென்ன கடலென்ன
அட எல்லாமே
மழைதானே
உன் மேகம்
என் மேகம்
அது வேறென்றால்
பிழைதானே
வாழ்க்கையிலே
சில உறவை
பாதியில் பாப்போமே..................
பார்த்ததுமே....
நம் வாழ்வின்
மீதியை பாப்போமே
ஓஓஓ.....
உலகத்திலே
சிறந்த மொழி........
நீ பேசும்
மௌன மொழி......

மௌனம் ஒரு
கடல்போலே
அது புயல்கள் உறங்கும்
பகுதி
புயல் தூண்டி
ஊடுருவும்
உன் வார்த்தை
எனும் கருவி
மௌனம் எனும் மேகத்திலே
நீ பேசும் மொழி
காற்றாக
காற்றலைகள்
மோதியதால் நம் வார்த்தையெல்லாம்
மழையாக
மழை காக்கள்
வரவேற்க
ஜன்னல் திறப்போமா
மழை பேசும் மொழிகேட்க
குடைகள் தவிப்போமா
ஓஓஓஓ...........

உலகத்திலே
சிறந்த மொழி........
நான் பேசும்
மௌன மொழி......
நீ என்ன பேசுவாய்
என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன்
உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம்
நம் மௌனம் அறியும்
அந்த மௌனம் கோடி
பாஷை பேசுமே....

No comments:

Post a Comment