Tuesday, September 24, 2013

J K Ennum Nanbanin Vaazhlkaai -Uyire Uyire song lyrics in tamil

உயிரே உயிரே
நீ வந்தது
ஏனென்று தெரியாதே
உயிரே உயிரே
நீ போவது
எங்கென்று புரியாதே
எதுவும் எதுவும்
நம் கையில்
நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன்
தன் அறிவில்
வெல்லவும் இயலாதே
நாளை என்ன
ஆகும் என்று யாரும்
சொல்ல முடியாதே
நாகரிக வாழ்விலுள்ள
மோகம் மட்டும்
குறையாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உண்மையென்று ஆகாதே
காணபோகும்
மாற்றம் என்ன
யூகம் செய்யக்
கூடாதே
ஹே.....
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே

காலை வேளையில
தோன்றும் சூரியன்
மாலை ஆனதும்
சாய்ந்து தூங்குதே
மாலை வேளையில்
தோன்றும் சந்திரன்
காலை வந்ததும்....
தேய்ந்து நீங்குதே
காணும் யாவுமே
அவ்வாறே
மாறுகின்றதே மண்மேலே
மாறிடாமலே போனாலே
நாம் ஏது
காதல் கொள்வது தீங்கானால்
காமம் வந்தது எவ்வாறு?
தேவையானதை தேடாமல்
வாழ்வேது..........
ஹேய் ஹே ஹே............
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே


No comments:

Post a Comment