உயிரே உயிரே
நீ வந்தது
ஏனென்று தெரியாதே
உயிரே உயிரே
நீ போவது
எங்கென்று புரியாதே
எதுவும் எதுவும்
நம் கையில்
நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன்
தன் அறிவில்
வெல்லவும் இயலாதே
நாளை என்ன
ஆகும் என்று யாரும்
சொல்ல முடியாதே
நாகரிக வாழ்விலுள்ள
மோகம் மட்டும்
குறையாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உண்மையென்று ஆகாதே
காணபோகும்
மாற்றம் என்ன
யூகம் செய்யக்
கூடாதே
ஹே.....
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே
காலை வேளையில
தோன்றும் சூரியன்
மாலை ஆனதும்
சாய்ந்து தூங்குதே
மாலை வேளையில்
தோன்றும் சந்திரன்
காலை வந்ததும்....
தேய்ந்து நீங்குதே
காணும் யாவுமே
அவ்வாறே
மாறுகின்றதே மண்மேலே
மாறிடாமலே போனாலே
நாம் ஏது
காதல் கொள்வது தீங்கானால்
காமம் வந்தது எவ்வாறு?
தேவையானதை தேடாமல்
வாழ்வேது..........
ஹேய் ஹே ஹே............
காட்சி மாறிப் போனாலும்
நம் கண்ணை விட்டு போகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவைக் கொல்ல முடியாதே
No comments:
Post a Comment