Saturday, September 21, 2013

SUNDRAPANDIAN- nenjukkula nenjukkula song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வைச்சுருக்கேன் ஆச
அட உச்சந்தலை உள்ளுக்குள்ள
ஏதேதோ பேச

எனக்காக வந்தவனே
இள நெஞ்சில் நின்னாயே
உசிர் கூட துச்சமுன்னு
சொல்லாம சொன்னாயே

என் நெத்திமுடி மேல
நீ கொத்தி விளையாட
ஒரு நேரங்காலம் வந்திருச்சு
இன்னுமென்ன ஜாடை

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வச்சுருக்கேன் ஆச
அட உச்சந்தலை உள்ளுக்குள்ள
ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே
இள நெஞ்சில் நின்னாயே
உசிர் கூட துச்சமுன்னு
சொல்லாம சொன்னாயே


ஆத்துவெள்ளம் நீயென்றால்
ஆடும் தோணி நானே
ஆடவிட்டு அக்கறையில்
கொண்டு சேர்ப்பாயே
பட்டாம்பூச்சி நானென்றால்
எட்டுத்திசை நீயே
எந்தப் பக்கம் போனாலென்ன
நீதான் நிப்பாயே

மெட்டி வாங்கித் தரச்சொல்லி
குட்டிவிரல் கூத்தாட
பட்டுச் சேலை பல நூறு
பாழாக் கிடக்கு
பக்கத்துல நான் தூங்க
பத்தமடப் பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க
நாளும் போகுது...

என் நெத்திமுடி மேல
நீ கொத்தி விளையாட
ஒரு நேரங்காலம் வந்திருச்சு
இன்னுமென்ன ஜாடை

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வைச்சுருக்கேன் ஆச
உச்சந்தலை உள்ளுக்குள்ள
ஏதேதோ பேச.....

முள்ளுத்தச்ச காயத்த
முத்தமிட்டு ஆத்த
பத்து ஊரத் தாண்டிவந்து
பக்கம் நிப்பாயே.
பட்டப் பகல் என்றாலும்
பித்தம் தலைக்கேறும்
என்னைச் சீண்டி ஏதோ ஏதோ
பேச வைப்பாயே
பத்து தலைப் பாம்பாக
அத்துமீறும் என் ஆசை
மொட்டுப் போல முகம் கூப்பி
உள்ள மறைப்பேன்.

நெஞ்சுக்குழி மேலாட
தாலிக்கொடி நான் தேட
மஞ்சத் தண்ணி நீராட
எப்ப வருவ.....

என் நெத்திமுடி மேல
நீ கொத்தி விளையாட
ஒரு நேரங்காலம் வந்திருச்சு
இன்னுமென்ன ஜாடை

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வச்சுருக்கேன் ஆச
அட உச்சந்தலை உள்ளுக்குள்ள
ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே
இள நெஞ்சில் நின்னாயே
உசிர் கூட துச்சமுன்னு
சொல்லாம சொன்னாயே


No comments:

Post a Comment