Sunday, September 29, 2013

Idharkuthane Aasaipattai Balakumara - Yaen Endral unn piranhthanaal song lyrics in tamil

ஏன் என்றால்
உன் பிறந்தநாள்

உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைபிடிப்பேன்
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் தரை துடைப்பேன்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்

கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒளி வாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாட சொல்வேன்
இலை எல்லாம் கை தட்ட
அது வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவ செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளையிடுவேன்......
அதிகாலையில் உன்னை
எழுப்பிட உத்தரவிடுவேன்...
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்

மலை உச்சி எட்டி
பனி கட்டி வெட்டி
உன் குழியில் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிக்கட்டி
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குழிக்கத்தான்
இடம் பார்த்து இறக்கிடுவேன்
ஏய் ஏய் ஏய் ய ய ய....................
கண்ணில்லா பெண்மீன்கள் பிடித்து
ஓ ஓ ஓ ஓ..................
உன்னோடு நானே தூவிடுவேன்
நீ குளித்து முடித்து துவட்டத்தான்
என் காதல் மடித்து தந்திடுவேன்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
நெஞ்சத்தை வெதுப்பாக மாற்றி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகு பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்கள் நீ மூட்டி
என் வேண்டுவோர்
அதை
கேளடி
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்


No comments:

Post a Comment