Monday, March 24, 2014

Cuckoo - Kodaiyila Song lyrics in tamil

Cuckoo - Kodaiyila Song lyrics in tamil

கோடையில மழைபோல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலை இளங்கதிராக
கண் அருகே நீ இருக்க
மாலை வரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ
போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ

காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை.
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உந்தன் கைவிரலால் தொடும்பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
இரண்டு இருதயம் கலந்துவிட

மாறிட யாவும் என்று
சொல்லும் வார்த்தியில் நெசமுமில்லை
உண்மைக் காதலைப் பொறுத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்புத் தீ இன்றும் அணைவதில்லை

உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
இரண்டு இருதயம் கலந்துவிட

கோடையில மழைபோல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலை இளங்கதிராக
கண் அருகே நீ இருக்க
மாலை வரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ



Cuckoo - Kalyanamam Kalyanam Song lyrics in tamil

Cuckoo - Kalyanamam Kalyanam Song lyrics in tamil

காதல் கண்மணியே
கல்யாணமா கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
காதலி பொண்ணுக்குக் கல்யாணம்

ஒண்ணா சிரிச்சு மெய்யா பழகி
கண்ணால் பேசி காத்துக் கிடந்து
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து
உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசி வரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அதனையெல்லாம் மறந்துவிட்டு
பறந்தும் விட்டாளே

காதல் கண்மணியே
கல்யாணமா கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
காதலி பொண்ணுக்குக் கல்யாணம்

காதல் கண்மணியே......
கூறச் சேலை மடிச்சுக்கட்டி
குங்குமப் பொட்ட நெத்தியில் வச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள் காதலிச்சவன் கலங்கி நிப்பான்
அப்புராணியா......
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
கெட்டிமேளம் காது பொளக்க
நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பா ஊரு முன்னாலே
அவள காதலிச்சவன் கதறிடுவான்
ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி சனத்தை வணங்கிகிட்டு
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுக்கிட்டு
பரிசுகூட வாங்கிவப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான்
சந்நியாசியா

ஆ......வகை வகையா சமைச்சு வச்சு
வாழை இலையில் பந்தியுமிட்டு
புருஷனுக்கு ஓட்டிவிடுவோ போட்டோ புடிக்கத்தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்
மங்கள் தாலி கழுத்திலாட
மந்திர வார்த்தை ஐயரு ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்துடுவானே
நடுரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

காதல் கண்மணியே
கல்யாணமா கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
காதலி பொண்ணுக்குக் கல்யாணம்


Cuckoo - Enda Mapla Song lyrics in tamil

Cuckoo - Enda Mapla Song lyrics in tamil


ஏன்டா மாப்பிள எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும் டாப்பில
தோடா சுத்துற பூமிமேல நிக்குற
ஊந்துபோடா சின்ன கேப்பில

சன்னு போனா நைட்டுதானடா
அந்த மூனு வந்தா லைட்டு எதுக்குடா
அழுது நின்னா நீ வேஸ்டுடா
வந்து போதும் வாழ்க்கை ஒரு டைம்பாசுடா

ஏன்டா மாப்பிள எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும் டாப்பில
தோடா சுத்துற பூமிமேல நிக்குற
ஊந்துபோடா சின்ன கேப்பில

டோன்ட் ஒரி பீ ஹேப்பி
டேக் இட் ஈஸி கம் பேபி
டோன்ட் ஒரி பீ ஹேப்பி
டேக் இட் ஈஸி கம் பேபி

கண்ணுல காணாத
கரன்ஸி நோட்டதான்
கையில எண்ணுவோன்டா
கவிதையே எழுதாம
காதல நேருல
வாயில சொல்லுவோன்டா
மேட்டுமேல நாத்து நட்டு
சாமிதான் படைச்சாருடா
நேத்து மழையில முளைச்ச காளான்
காத்தடிச்சா சாஞ்சுபுடுவடா டேய்

ஏன்டா மாப்பிள எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும் டாப்பில
தோடா சுத்துற பூமிமேல நிக்குற
ஊந்துபோடா சின்ன கேப்பில


ல....ல.....ல......

ஏய் யாருடா டீ போடுப்பா......ஆ.....
டேய்....போமா

ஓ மை காட்
ஐ டோண்ட் கேர்
யு டோண்ட் கேர்

ஓ மை காட்
ஐ டோண்ட் கேர்
யு டோண்ட் கேர்

கரெக்ட்டுப்பா
நமீதா நயன்தாரா
எங்கள எழுப்புற
செல்போன் ரிங்க்டோனுடா
தமன்னா சமந்தா
முகத்த பாக்காத
நாங்க அவங்க பெரிய ஃபேனுடா
நான் பாத்ததில
உன் ஒருத்திய தான்
நல்ல அழகியென்பேன்
நல்ல அழகியென்பேன்
உன் சேலையில
நான் வீடு கட்டவா
அதுல ரெண்டு பேருந்தான்
சேந்து வசிக்க
அப்படிப்போடு இப்படிப்போடு
அசத்திப்போடு கண்ணால
படிச்சுப் பாத்த பேப்பரத்தான்
கசக்கிப் போடு பின்னால

ஏய்
ஏன்டா மாப்பிள எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும் டாப்பில
தோடா சுத்துற பூமிமேல நிக்குற
ஊந்துபோடா சின்ன கேப்பில

சன்னு போனா நைட்டுதானடா
அந்த மூனு வந்தா லைட்டு எதுக்குடா
அழுது நின்னா நீ வேஸ்டுடா
வந்து போதும் வாழ்க்கை ஒரு டைம்பாசுடா

ஏன்டா மாப்பிள எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும் டாப்பில
தோடா சுத்துற பூமிமேல நிக்குற
ஊந்துபோடா சின்ன கேப்பில



Cuckoo - Agasatha Song lyrics in tamil

Cuckoo - Agasatha Song lyrics in tamil

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணு படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வனங்களே
தமிழே....தமிழே...
வருவேனே உன் கரமாய்
கொடியே....கொடியே
அழுறேனே ஆன்ந்தமாய்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்பத் தேடும் குழந்தையா
உன்னைத் தேடும் உசிரு பசியில
கோடித் தேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா.......அழகா
குயிலாவேன் உன் தோளில்
அழகி....அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே



Cuckoo - Manasula Soora Kaathey Song lyrics in tamil

Cuckoo -  Manasula Soora Kaathey Song lyrics in tamil

மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற நியாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய்முகம்
ரகசிய யோசனை
கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுடச்சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்
ஆன்ந்தம் பெண்ணாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக்
குயில் போலக் கூவுதே
கைதொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே


Cuckoo - Potta Pulla Song lyrics in tamil

ஒத்த நொடியில தான் எனக்கு சித்தங் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது
நெஞ்சுக் குழியில கவுலி கத்துது
தீக் கங்குல பால் சட்டிய
போல் பொங்குறேனே

ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னைத் தொட்ட்து போல்
தொட்டுவிட்டாள் அழகுரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்த்தான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவச்சா அந்த புள்ள
குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள

நான் வேற சொல்லு இல்ல
நானும் சொல்ல
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே

சொற்களிலே வித்தகாராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால்
ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சக்கரையாம்
அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆட்சி
இப்படி நான் என்ன சொல்ல
சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீலை
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே