ஆகாயம் எத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல் தான்
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்
மரம் ஏற ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கிணறே தோண்டி விடும்
வெறும் கல்லை வைரக்கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்
கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதல் எதையும் தாங்கிவிடும்
முட்டும் கதவுகளை தட்டும்
சரிக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றி படியாய் மாற்றிடுமே
அண்ணாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இருமணம் விரும்பி துணிந்து நுழையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே
வேரோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்து விடும்
கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாற்றிவிடும்
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல் தான்
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்
மரம் ஏற ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கிணறே தோண்டி விடும்
வெறும் கல்லை வைரக்கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்
கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதல் எதையும் தாங்கிவிடும்
முட்டும் கதவுகளை தட்டும்
சரிக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றி படியாய் மாற்றிடுமே
அண்ணாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இருமணம் விரும்பி துணிந்து நுழையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே
வேரோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்து விடும்
கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாற்றிவிடும்
காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா
புலி வாழும் குகையுள்ளே கிளிவாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல் தான்
இது போகும் வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது
மலையேறும் எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது...
இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் என்னை அறியாமல் கண்ணீர் வரும்
ReplyDeletegoos bumping
ReplyDeleteIntha maathiri oru sila paata vachi thaan manasa thethitu iruken
ReplyDeleteVery nice my favorite song
ReplyDelete