Monday, October 6, 2014

Aagayam ithanai naal Song Lyrics in Tamil

                    
ஆகாயம் த்தனை நாள் மண்மீது வீழாமல்

தூணாக தாங்குவது காதல் தான்
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல் தான்
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்
மரம் ஏற ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கிணறே தோண்டி விடும்
வெறும் கல்லை வைரக்கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்

கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதல் எதையும் தாங்கிவிடும்
முட்டும் கதவுகளை தட்டும்
சரிக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றி படியாய் மாற்றிடுமே
ண்ணாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இருமம் விரும்பி துணிந்து நுழையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே
வேரோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்து விடும்
கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாற்றிவிடும்


காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா
புலி வாழும் குகையுள்ளே கிளிவாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல் தான்
இது போகும் வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது
மலையேறும் எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது...

4 comments:

  1. இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் என்னை அறியாமல் கண்ணீர் வரும்

    ReplyDelete
  2. Intha maathiri oru sila paata vachi thaan manasa thethitu iruken

    ReplyDelete