Saturday, September 21, 2013

SUNDRAPANDIAN - kathal vanthu poiyaga lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

காதல் வந்து பொய்யாக
உன்னைச் சுற்றினாலே
உள்ளுக்குள்ளேப் பொல்லாத பூப்பூக்கும்

பூக்கள் என்று கைநீட்டி நீயும் தொடும்போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீமூட்டும்

உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வார்த்தையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்

காதல் வந்து பொய்யாக
உன்னைச் சுற்றினாலே
உள்ளுக்குள்ளேப் பொல்லாத பூப்பூக்கும்

ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றைக் கூந்தல் மோதும் போதும்
நண்பனோடு இருக்கும் போதும்
தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்குமிங்கும் கண்கள் தடுமாறும்

ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றைக் கூந்தல் மோதும் போதும்
நண்பனோடு இருக்கும் போதும்
தன்ன்ந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்குமிங்கும் கண்கள் தடுமாறும்

கண்ணோடும் கனவோடும்
யுத்தம் ஒன்று வந்திடுமே
கண்ணீரைத் தந்தாலும்
காதல் இன்பம் என்றிடுமே
காதல் என்றும் கடலைப் போல
கரையை யாரும் கண்டதில்லை.
காதல் கையில் மாட்டிக் கொண்டால்
ஐயோ பிடிக்கும் பைத்தியமே

காதல் வந்து பொய்யாக
உன்னைச் சுற்றினாலே
உள்ளுக்குள்ளேப் பொல்லாத பூப்பூக்கும்......

காற்றில் கையை வீசிடத் தோன்றும்
மேகம் பார்த்து பேசிட்த் தோன்றும்
காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே
நேரங்கெட்ட நேரத்தில் எழுப்பும்
நடக்கும்போதே பறந்திட துடிக்கும்
காதலுக்கு காதல் செய்யத் தெரியாதே.

பறவைக்கு வேறாரும்
பறக்கக் கற்றுத் தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன் உதவித் தேவையில்லை

கஷ்டம் நஷ்டம் கனத்தைப் பார்த்தால்
இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு
காதல் கதவைத் திறந்திடுமே

காதல் வந்து பொய்யாக
உன்னைச் சுற்றினாலே
உள்ளுக்குள்ளேப் பொல்லாத பூப்பூக்கும்

பூக்கள் என்று கைநீட்டி நீயும் தொடும்போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீமூட்டும்


No comments:

Post a Comment