FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
http://goo.gl/kkSxQb
வெறி கொண்ட புலி ஒன்று
நரி ஒன்றை குறி கொண்டு காலம் பாக்கும் நித்தம்
எந்த நேரம் கொலை விழும்
எந்த நேரம் தலை விழும்
வேங்கை வெளியில் சுத்தும்
உடலுக்கு உடல் எடு
உயிருக்கு உயிர் எடு
உள்ளே மிருகம் கத்தும்
கங்கை நீரும் தீர்ப்பதில்லை
காவிரி நீரும் தீர்ப்பதில்லை
தாகம் தீர்க்கும் ரத்தம்
ஓ ஏகோ ஓ.............
ஓ ஏகோ ஓ.............
ஆயுதமே
வாழும் வரை....
பழி உணர்வும்...........
தீர்வதில்லை.......
மனிதனின் உள்ளத்துக்குள்
உள்ளம் எனும் பள்ளத்துக்குள்
உறங்கும் உறங்கும் சிங்கம்
பழிவாங்கும் நினைப்புடன்
விழி ரெண்டும் தீப்பிடிக்க
விழிக்கும் விழிக்கும் சிங்கம்
இடம் பொருள் ஏவல் எல்லாம்
எங்கு வந்து கூடுமென்று
அழையும் அழையும் எங்கும்
கிழக்கினில் அடிவாரம் சிவப்பதென்ன என்ன
இரவினில் ஒழுகிய ரத்தம் ரத்தம்
ஓ கோ ஓ.....
ஓ கோ ஓ.....
ஆயுதமே
வாழும் வரை....
பழி உணர்வும்...........
தீர்வதில்லை.......
குத்து பெற்ற நகத்திற்கு
கொத்தி பழிக்கும் மட்டும்
தூக்கம் தூக்கம் இல்லை
மண்ணில் வைத்த கன்னிவெடி
எந்த பக்கம் வெடிக்குமோ
நேரம் காலம் இல்லை
விடிவெள்ளி விழும் முன்னே
தலை ஒன்று விழும் என்று
வேலை செய்யுது மூளை
புயல் மழை ஒரு பக்கம்
பூகம்பம் மறுபக்கம்
யாருக்கு விடியும் நாளை
ஓ கோ ஓ..........
ஓ கோ ஓ..........
ஆயுதமே
வாழும் வரை....
பழி உணர்வும்...........
தீர்வதில்லை.......
நன நன நன நன
நன நன நன நன
நானா நானா நனா
நன நன நன நன
நன நன நன நன
நானா நானா நனா
No comments:
Post a Comment