Sunday, October 6, 2013

kaattukuilu manasukkulla song lyrics in tamil - Thalapathy

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்

போடா எல்லாம் விட்டுத்தள்ளு
பழச எல்லாம் சுட்டுத்தள்ளு
புதிதா இப்ப பிறந்தோமுன்னு
எண்ணிக் கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர்
விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊத காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்பகூளம் காயவச்சி காயலாம்
ஓய்
தைபிறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கபாலு வெள்ளம் போல பாயலாம்

அச்சு வெள்ளம் பச்சரிசி
வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கின்ற நாள் தான்
ஓய்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்

பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்ம்ம் நான் இல்ல

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
நான் இல்லை
உள்ளம் மட்டும் நானே என்
உசுரக் கூடத் தாரேன்
என் நண்பன் கேட்டா வாங்கிக்கோனு
சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
தினமும் திண்ணேன் பாரு
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம் பாடி நாம் தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்


No comments:

Post a Comment