Sunday, August 24, 2014

Pirivonrai santhithean Song Lyrics in Tamil

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
                                          

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ நின்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ
அன்பே அன்பே ...... அன்பே அன்பே ...... அன்பே அன்பே ...... அன்பே அன்பே ...... அன்பே அன்பே ......
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
ஒரு வரி நீ ஒரு வரி நான்
திருக்குறளாய் உன்னை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் வடிக்காது என் சட்டை

என்னை நானே தேடி போனேன்
பிரிவில் நானே நீயாய் ஆனேன்
கீழ் இமை நான், மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்து கொண்டேன் காதல் என்றே
நான் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிரிந்த நாளில் தான் நாம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே பிரிவின் தாகம் காதல் தானே...
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
அன்பே அன்பே ..... அன்பே ... அன்பே

அன்பே அன்பே ..... அன்பே ... அன்பே

No comments:

Post a Comment