Friday, August 1, 2014

Anjaan - Kadhal Aasai Song Lyrics in Tamil

காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து
உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே
யோசனை ஓ....
மாறுமோ ஓ....
பேசினால் ஓ....
தீருமோ ஓ....
உன்னில் என்னை போல காதல் நேருமோ
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து
உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே

பகலில் இரவு பொழிகின்ற
பனித்துளிகள் நீதானே
வயதினை நனைக்கின்றாய்
உயிரினில் இனிக்கின்றாய்
நினைவுகளில் மொய்காதே
நிமிடமுள்ளை தைக்காதே
அலையென குதிக்கிறேன்
உலையென கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன்
கூப்பிடும் நேரத்தில்
உன் அறைக்குள் வருவேன்
ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்


ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

விழிகளிலே உன் தேடல்
செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலை இல்லை
எதைக்கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னைவிட ஏதுமில்லை
யாரைக்கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
என்னைப் பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்

ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே


No comments:

Post a Comment