Friday, August 1, 2014

Thirudan Police - Pesadhe Song Lyrics in Tamil

பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் நாற்றாக
உன் பேரைத்தானே என் நெஞ்சில் இன்று இசைக்கிறேன் பாட்டாக

பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
தெரியாமல் நான் தவித்தேனே

உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்ததும் கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
புரியாமல் நான் தவிக்கிறேன்

காதல் என்று சொன்னால்
இந்த மயக்கம் இன்று புரிகின்றதே
உன்னால் எந்தன் பெண்மை
புதிய தயக்கம் இன்று அறிகின்றதே

நீ என்ன சொல்ல
நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா?

நீ என்னை வெல்ல
நான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரின்
யுத்தம் அடங்காதே

பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம்
பெண்ணே பெண்ணே சொல்லி விடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு வந்தேன்
நலம்தானா என் இதயம் அங்கே

அங்கே அங்கே என்னுடைய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம்
கண்ணில் வைத்து காவல் செய்வாய் என்றதுடா
உன் இதயம் இங்கே


தேகம் இரண்டு ஆனால் இதயம் ஒன்று
இங்கு துடிக்கிறதே

தூரம் தள்ளி நின்னும் சுவாசக்காற்று
நம்மை இணைக்கிறதே

நீ என்ன சொல்ல
நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா

நீ என்னை வெல்ல
நான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரின்
யுத்தம் அடங்காதே

பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா


No comments:

Post a Comment