Tuesday, August 19, 2014

Kaaviyathalaivan - Sollividu Sollividu Song Lyrics in Tamil

சொல்லி விடு சொல்லி விடு சொல்லி விடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லி விடு
நின்று விடு நின்று விடு நின்று விடு
இப்போரில் இவ்விடம் நின்று விடு
சென்று விடு சென்று விடு சென்று விடு
இந்த யுத்தம் போதும் சென்று விடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை
முதலில் நீயே கொன்று விடு
கண்ணா என்னை முதலில் கொன்று விடு
ஏன் அம்பை ஏந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்கடித்தாய்
உலகத்தை வெல்ல வைத்தாய்
உள்ளுக்குள்ளே தோற்கடித்தாய்
காண்தீபம் கேட்கிறேன் கண்ணா
காண்தீபம் கேட்கிறேன்
சொல்லி விடு சொல்லி விடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லி விடு
நின்று விடு நின்று விடு நின்று விடு
இப்போரில் இவ்விடம் நின்று விடு
காலச்சக்கரம் உன் கையில்
அதில் சுற்றியது ஏனோ நான்

விதியும் சதியும் உன் கண்ணில்
அதில் சிக்கியது ஏனோ நான்
கர்ணனை கொன்ற பாவம்
கண்ணனுக்கு போகும் என்றாய்
கண்ணனுக்கே பாவம் தந்த
பாவம் எங்கு போகும் அய்யோ..
சொல்லி விடு சொல்லி விடு சொல்லி விடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லி விடு
நின்று விடு நின்று விடு நின்று விடு
இப்போரில் இவ்விடம் நின்று விடு
உலகமே யுத்தம் எதற்கு
ஓ... உயிர்களே ரத்தம் எதற்கு
ஓ.....இறைவனே துயரம் எதற்கு
ஓ....இதயமே வன்மம் எதற்கு
கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ
தேரை நிறுத்து
போதும் இந்தக் குருதிக் குளியல்
போரை நிறுத்து....   
நாளை உலகம் நலம் பெறும் என்று
போரை நிறுத்து...........
போரை நிறுத்து...............    


No comments:

Post a Comment