Sunday, August 24, 2014

Kadhal valarthean Song Lyrics in Tamil

                                      காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
                                                
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும், நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ளே கூடுகட்டி காதல் வளர்த்தேன்.
என் இதயத்தில் பெண்ணே செடி ஒண்ணு தான் வச்சி வளத்தேன்  
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஏ புள்ள புள்ள உன்னை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள,,,,

பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உனை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றது நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே தானே
உனது பேர் எழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மலையில் அழியாம கொட புடிச்சேன்
மழை விட்டும் நான் நனச்சேன்

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்திடுவேன்
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேனவே தருவேன் கண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே ...கண்ணே
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை,, அடியே ஏ புள்ள.......


No comments:

Post a Comment