Tuesday, August 19, 2014

Meaghamann - Yaen Ingu Vandhaan Song Lyrics in Tamil

ஏன் இங்கு வந்தாய் பேசாதே என்றான்
ஜில்லென்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
உறங்கிக் கிடந்த புலங்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றாய்
சிறிது சிறிதாய் கிரக்கங்கள் எல்லாம் கிளப்பி விடுகின்றாய்
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே தேனை எடுக்கின்றாய்
காதல் பிறக்கும் நொடியின் முன்னே காமம் கொடுக்கின்றாய்
ஏன் இங்கு வந்தாய் பேசாதே என்றான்
ஜில்லென்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
என் நிழலை ரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இதயம் சரிவிலே மழைத்துளியாக உருள்கின்றான்
என் தோளில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தை மெதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பை அழகினில் ஏந்தி
கண்ணத்தில் பூசுகின்றான்
விடிய விடிய இரவினை வடித்தேன்
குடிக்கச் செய்தானே
கொடிய கொடிய வலிகளைக் கூட
வெடிக்க செய்தானே
ஏன் இங்கு வந்தாய் பேசாதே என்றான்
ஜில்லென்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
நான் நுனியில் நடக்கிறேன்
என் நிழலாய் தொடர்கிறான்
என் விளக்கை அணைக்கிறேன்

ஏன் இருளென படர்க்கின்றான்
உன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறிவினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை என்றேன்
வரையறை இன்றி என்னை அவன் சிறை பிடித்தான்
சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்கச் செய்தானே
கனவும் நனவும் தொடும் வரை எனக்கு
இருக்கச் செய்தானே
ஏன் இங்கு வந்தாய் பேசாதே என்றான்
ஜில்லென்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
 

        

No comments:

Post a Comment