Friday, September 5, 2014

Minsara poove pen poove Song Lyrics in Tamil

                         மின்சார பூவே பெண் பூவே

                                              
மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஒசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில்
நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே, சகியே, சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்
மின்சாரா கண்ணா
என் மன்னா
என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஒசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெரு மூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்
மதனா, மதனா, மதனா
என் பூவுக்கும் தேவைக்கும்
சேவைக்கும் நீ வேண்டும்
மின்சாரா கண்ணா


ஒரு ஆணுக்கு எழுதிய
இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய
இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிகொள்ள
என் கூந்தல் ந்திகொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா?
நான் உண்ட மிச்சபாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா?
வானம் வந்து வளைகிறதே
வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஒசைகேளாய்
கண்ணா கண்ணா
வெண்ணிலவை தட்டிதட்டி
செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழியில் வழிவது
அமுதமல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது
பழியென்று விலகிவிட்டேன்
வாள் விழியால் வலை விரித்தாய்
வஞ்சனை செல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டிஅல்ல
நீ ஆணையிட்ட சூடிகொள்ள
ஆண்கள் யாரும் பூக்களல்ல

மின்சாரா கண்ணா
என் மன்னா
என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஒசை கேளாய்

No comments:

Post a Comment