Thursday, September 18, 2014

Kaththi - Pakkam Vanthu Song Lyrics in Tamil

பெண்ணைஏப்பார்
ஒரு முத்தம் தா
இந்த பக்கம் வா
என்னை அணைத்திடவா
பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்குது
உன்னை நினைத்திட கைகள் பிடித்திட
மனசது துடிக்குது உண்மைதான்
பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்
பெண்ணே எந்தன் உலகம் நீதான்
நான் அந்த நிலவுக்குள் சுற்றி வரவா
உன்னை அணைத்துப் பார்க்க
உந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தி அடைவாய்
விண்மீது மண்ணது காதல்தான் கொண்டது
போலே நான் உன்மீது கொண்டிடவா
உன்னை முத்தங்கள் விட்டுப்பின்
வெக்கத்தில் விட்டுத்தான்
மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா
என்னைப் பார்த்தாலே போதுமே
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்துன்னை சீண்டிடுவேன்
என்னைப் பார்க்காமல் போகாதே
நெஞ்சம் தான் தாங்காதே
உள்ளங்கையில் உன்னைத் தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பெண்ணே எந்தன் கண்ணைப் பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னைக் கண்டதும்
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா
அடி போனது போகட்டும்
காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நான் உன்னை கண்ணது பார்க்க
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க
உதட்டில் இருக்கும் சிரிப்பு
ஆனால் உள்ளுக்குள் ஏனடி முறைப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட கருத்து
என்னத்தான் நீயுமே பார்க்க
ஆசைகள் வந்தென்ன தாக்க
மீண்டும் நான் உன்னைய பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்தது
உலகம் மறந்தது அடி உன்னால் புதிதாய் பிறந்தது
அட ஏன் இப்படி நிகழ்ந்தது
இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடி ஏன் இப்போ நீ சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே


மனமே
மனமே
ஒரு பொண்ணைத்தேடி நான் தொலைஞ்சேன்
மனமே
மனமே
அட காதலால நான் கரைஞ்சேன் 

மனமே
மனமே
ஒரு பொண்ணைத்தேடி நான் தொலைஞ்சேன்
மனமே
மனமே
அட காதலால நான் கரைஞ்சேன் 

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

மலர்ந்தது
உலகம் மறந்தது அடி உன்னால் பூதிதாய் பிறந்தது
அட ஏன் இப்படி நிகழ்ந்தது
இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடி ஏன் இப்போ நீ சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே ஒரு பொண்ணைத்தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன் 

மனமே…….

No comments:

Post a Comment