Thursday, September 18, 2014

Kaththi - Paalam Ethu Song Lyrics in Tamil

கொட்டு கொட்டு மேளங்கொட்டு
கட்டு கட்டு பாலங்கட்டு
இதயத்த இதயத்துக்கு இணைக்க பாலங்கட்டு

மார்சுல இவன் புறந்தான்
வீனசுல இவள் புறந்தா
கிரகங்க ரெண்டுத்துக்கும் இருக்கும் பாலம் எது?

சொர்க்கத்துல மரம் எடுத்து
கட்டுன பாலந்தான்
முத்தத்துல கட்டி வச்ச
பாலம் காதல்தான்

காதல் ஒரு மிதவ மிதவ பாலம்
அது இல்லனா
நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்

காதல் ஒரு மிதவ மிதவ பாலம்
அது இல்லனா
நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்

பேஸ் பேஸ் ரொம்ப நல்லாருக்கு

அண்டகுல அதிபதி நீயே
நமோ நமோ நாராயணாய
தொண்டர் குலம் போற்றும் உன்னையே
நமோ நமோ நாராயணாய

துன்பம் இங்க ஒரு கரைதான்
இன்பம் அங்க மறு கரைதான்
இரண்டுக்கும் மத்தியில ஓடும் பாலம் எது?

கோவிலுல கல் எடுத்து
பக்தியில சொல் எடுத்து
கட்டின பாலம் எது? சாமி பாலம் அது

பாவம் செஞ்ச கரை கழுவ
நினைக்கும் பூமிதான்

பாவத்த நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமிதான்

சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லனா
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்

சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லனா
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்

நேத்து வெறும் இருள் மயந்தான்
நாளை அது ஒளி மயந்தான்
நல்ல எதிர்காலத்துக்கு போகும் பாலம் எது?

குறும்பில இரும்பெடுத்து
அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது? குழந்தை பாலம் அது

வானத்து மீன் பிடிச்சு ரசிக்கும் வயசுதான்
எல்லாருக்கும் வேணும் அந்த குழந்தை மனசுதான்

குழந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் உன்னாலே
கண்ணுமுன்னே ஒளிரும் ஒளிரும் காலம்

குழந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் உன்னாலே
கண்ணுமுன்னே ஒளிரும் ஒளிரும் காலம்

குத்துக்கல்லு போலே நின்னானே
புசுக்குன்னு போயேபுட்டானே
எத்துக்காலு பூச்சியாட்டந்தானே
நாசமாயி நடந்து போனானே


ஏய் புறப்பதும் ஒரு நொடிதான்
இறப்பதும் ஒரு நொடிதான்
சொல்லடி ஞானப் பொண்ணே
ரெண்டுக்கும் பாலம் எது?

அஞ்சுபூண்டு பூவெடுத்து
நிறத்துல நார் எடுத்து
கட்டுன பாலம் எது?
வாழ்க்கை பாலம் அது

பாதையில முள் இருக்கும்
குத்துனா கத்தாதே

ஊர் அடிச்சு நின்னாக்கூட
பட்டுனு கத்தாதே

வாழ்க்கை அதுபோல கட்டுன பாலம்
நீ செத்தாக்கும்
சேத்துவச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்

வாழ்க்கை அதுபோல கட்டுன பாலம்
நீ செத்தாக்கும்
சேத்துவச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்


No comments:

Post a Comment