Saturday, May 17, 2014

Yaan - Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை


என் மனம் தேடிய வானவில்லை
எனக்காக ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசையவில்லை

சொப்பனம் கண்டபின் கண்ணை காணோம்
சொல்லிய வார்த்தையில் மொழியைக் காணோம்
கற்பனை செய்தபின் காளனே இல்லையே
கந்தக பூமியில் மேகமானாய்
கற்கண்டு மாமழை தந்து போனாய்
என்னுயிர் வாழ்ந்திரும் நேரமும் கையிலே

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

திங்கள் செவ்வாய் இன்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும்
நான் கண்டேன் என் மரணம்
நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சைப் பற்றி செந்தீ பரவும்
நீ எங்கே என் அமுதம்
திரைச்சீலைகள் இல்லாது என் ஜன்னல்
ஓடாகத் தேடினேன்
வெளி ஓசைகள் இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்
எனை உன் உள்ளம்
கைமீதி நீ தாங்கி தாலாட்ட ஆடினேன்
சாகா வரம் நீ தந்தால்
நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

விண்ணைவிட்டு செல்லும் நிலவே
பெண்ணைக் கண்டு நின்றால் நலமே
ஓ இங்கே நான் தனியே
முன்னும் பின்னும் முட்டும் மலையே
எங்கே எங்கே எந்தன் கலையே
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்
கடை கண்ணால நீ பார்த்த பார்வைகள்
போதாமல் ஏங்கினேன்
சில ஓசைகள் கேட்டாலே
நீதானோ என்றே நான் தேங்கினேன்
விரல் துன்பத்தை நீயன்றி
கைநீட்டி ஏமாந்து போகிறேன்
கள்ளம் இல்லா வெள்ளை நிலா
நீதானடி

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னைத் தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

என் மனம் தேடிய வானவில்லை
எனக்காக ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசையவில்லை



No comments:

Post a Comment