Tuesday, May 13, 2014

Vanavarayan Vallavarayan - Kongunattu Thendraluku song lyrics in tamil

ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளுண்டா

வந்தார வாழவைக்கும்
சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள
பெத்தெடுத்த சொர்க்கம் இது

ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

பசுமை நிறைஞ்ச வயலு
ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு
மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி
சிதறிக் கிடக்கும் தங்க வெயிலு
மலையின் மடியில் சாய்ந்து
புரண்டு படுத்துக் கிடக்கும்
வர முழுங்கி கவுண்டன் ஊரில்
மைனருங்க ரெண்டு பேரு
ஆடு புலி ரெண்டும் இங்கே
அண்ணன் தம்பி ஆயிருக்கு
ஆனாலும் பாசத்துக்கு
இவங்கதான் விதிவிலக்கு
அதுக்கு ஓர் கதை இருக்கு
கேளுங்கடா இவங்க கதையத்தான்

வந்தார வாழவைக்கும்
சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள
பெத்தெடுத்த சொர்க்கம் இது

ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

உறவு நிறைஞ்ச குடும்பம்
உலகம் அதுல அடங்கும்
வீடு வாசல் வீதியெல்லாம்
பால போல பாசம் பொங்கும்
உயிர உடலு பிரிஞ்சா
வாழ்க்கை இல்லடா கோவிந்தா
அண்ணன் தம்பி ரெண்டு பேரும்
அப்படித்தான் சேர்ந்து வாழ்ந்தா
அண்ணனுக்கு கன்னி ராசி
பொண்ணு மட்டும் கிடைக்கலடா
தம்பிக்குத்தான் பொண்ணுங்கள
சுத்தமா பிடிக்கலடா
ஊரு சனம் தூங்கலடா
கேளுங்கடா இவங்க கதையத்தான்

ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளுண்டா

வந்தார வாழவைக்கும்
சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள
பெத்தெடுத்த சொர்க்கம் இது



No comments:

Post a Comment