Saturday, May 17, 2014

Yaan - Aathangara Orathil Song Lyrics in Tamil

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குன்னு மேல

காத்தடிக்கும் திசையில என் மனச
கழுத்தக்கட்டி இழுக்குது சேலை
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆளு

தூக்கத்தில் சிரிக்கிறன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறன் பெண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறன் பெண்ணாலே
ஒரு கரப்பான் பூச்சி போல என்னை
கவுத்துப் போட்டாளே
மோசமா கடிக்கிற கண்ணாலே
அடி இன்னொரு தடவ இதய சுழுக்க இடுப்ப ஆட்டாதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குன்னு மேல

கவ் வீகர சேகே
பெண்ணே மாமாகிட்ட மோத
நீ நடக்கிற நடை உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை
நா என்ன தெருவுல சுத்துற நாயா
இரவும் பகலும் என்ன கல்லடிச்சு துறத்துற
உங்கப்பாகிட்ட அடிவாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்னை பாத்திடவே பாத்திடவே நானும்
வந்திருக்கேன் வந்திருக்கேன் பெண்ணே
ஒருமுறை காதல சொல்லு
உன்னை பிடித்திடவே பிடித்திடவே நானும்
வந்திருக்கேன் வந்திருக்கேன் பெண்ணே
காதல காதல சொல்லு
வாய் பேசும் பாஷையென்ன கிளியோ
ஊர் பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீதானா
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜிஞ்ஜினா ஜினுக்கு
அடி ஐஞ்சரை மணிக்கு
ஜிஞ்சரு சோடா தரவா நான் உனக்கு
நான் பாத்த ஒருதலை நீதானே
உன்னால தருதல நான்தானே
அட நெருப்புல உழுந்த
ரேசன் அரிசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தேனே
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்னைத் தொட்டா
குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குன்னு மேல

காலாலே ஆடுது கொலுசு
ஏலேலோ பாடுது மனசு
ஒரு இரும்பப் பாத்த காந்தம் போலே
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வரியா
ஏமாத்திப் போவது சரியா
என்ன சவுக்கார்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகுறையா
மன்னாதி மகன் என இருந்தேனே
உன்னால தெருவுல புரண்டேனே
என் வாடகை சைக்கிளில்
ஒரு முறை வந்தால் வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கண்ணத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலா சினுங்காதே
உன்னை நம்பியே வந்தேன்
என்னையும் இப்போ நம்பியார் ஆக்காதே
ஆத்தங்கர கம்மங்கர
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே
குயிலுக்குப்பம் ஜிஞ்ஜினக்கு ஜினுக்கு
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா டன்டனக்கா டனக்கு

காத்தடிக்கும் திசையில என் மனச
கழுத்தக்கட்டி இழுக்குது சேலை
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆளு





No comments:

Post a Comment