ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடித் தேடித்தான்
உன்னைத் தொடரும்
தேவை இந்த யுத்தம்
போதும் போதுமென
பொறுத்தாலும்
வீரும் வீருமென
தடுத்தாலும்
தாகங் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் பொங்கும்
யுத்தம்
ஆண்டாண்டு காலம்
மண்ணில்
தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன்
நெஞ்சில்
சாயது கொஞ்சம்
வேற வழியே இல்லை
பூஜை ஒன்னு போடப்போரானே
ஒரு துணையே வேணா
தன்னந்தனியா மோதப்போரானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப்பாயும் நேரம்
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடித் தேடித்தான்
உன்னைத் தொடரும்
தேவை இந்த யுத்தம்
தேடித் தேடி கால்கள்
எங்கோ போகுதே
மனம் வாடி வாடி
கொஞ்சம் ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே
ஆடும் கண்ணாமூச்சுதான்
அட மாட்டிக்கிச்சு
இங்கே பட்டாம்பூச்சுதான்
தனியாக ஒரு மானைத்
தேடியே
நீ ஓடும் ஓட்டம்
தடமாறும் முன்
எண்ணம் எங்கிலும்
ஏனோ ஓர் வாட்டம்
கண்ணீரை நீயும்
சிந்தக்கூடாது
கண்டாலே போதும்
துன்பம் தொடராது
வாழ வச்ச தெய்வம்
விட்டுப் போனதே
அதை அறியாதிந்த
மனசு விக்கிப் போனதே
அட ஆலமரம் ஒன்னு
சாஞ்சுகிடக்கே
அதை யாரு வந்த
சொல்ல சாபம் இருக்கே
கலங்காதே இது கடவுள்
சோதனை
காணாமல் போகும்
அதனாலே நீ மீண்டு
வந்ததும்
பத்து தலைமுறை பேசும்
வாடாதே பூமி விடியாததா
போடா போ உன்னால்
முடியாததா
வேற வழியே இல்லை
பூஜை ஒன்னு போடப்போரானே
ஒரு துணையே வேணா
தன்னந்தனியா மோதப்போரானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப்பாயும் நேரம்
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி
நீ மறைஞ்சாலும்
தேடித் தேடித்தான்
உன்னைத் தொடரும்
தேவை இந்த யுத்தம்
போதும் போதுமென
பொறுத்தாலும்
வீரும் வீருமென
தடுத்தாலும்
தாகங் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் பொங்கும்
யுத்தம்
No comments:
Post a Comment