ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதன் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுத்தண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா.......
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா......
ஆத்தாடி............
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
நீ மகுடத்தில் வைரக்கல்லு
நானோ மழபெஞ்ச உப்புக் கல்லு
உன்ன தொடவோ விரல் படவோ
ஒரு பொருத்தும் எனக்கேது
நான் தரமான தங்கக்கட்டி
நான் தகரத்த கட்டிக்கிட்டேன்
என்னை அடிக்க காத்துகிடக்க
உன்ன போல ஆளு ஏது
ஆசைகள் இருந்தாக்கூட
மனம் மசியாது
ஆத்துல விழுந்தாக் கூட
நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது.........
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பாளா
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருப்பாளா
கடிகாரம் முள்ளபோல
என்ன தினந்தோறும் சுத்திவாயா
என்ன துரத்து தூள் பறத்து
இந்த அள்ளிப்பூ கிள்ளிப்போயா
புளி மூட்டத்தூக்கிப் பாத்தேன்
இப்ப பூ மூட்ட தூக்கப் போறேன்
இளஞ்சிறுக்கி உன்ன முறுக்கி
அருணாக்கயிறாக்கப்போறேன்
இடுப்புல கயிறா கிடக்க மனந்தான் ஏங்குதையா
கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தமையா
விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே........
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதன் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுதண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா.......
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா......
No comments:
Post a Comment