Sunday, November 16, 2014

Isai - Puthandin Song Lyrics in Tamil

நியூயியர்........
நியூயியர்........
நியூயியர்..........

விஸ் யு ஹேப்பி நியூயியர்.......
புத்தாண்டின் முதல் நாள் இது
புதிதான இசை பூத்தது
ஒலி வெள்ளம் வானத்தை தாக்குது..........
நான் என்பது நாம் என்றானது
நாம் என்பது நாடு என்றானது
வரும் நாளும் நமதென்றே ஆனது.........
பூமி முழுதும் வெடிகள் வெடிக்க
கோடி இதயம் இணைந்து துடிக்க
காலம் புதிதாய் கதவு திறக்க
நேற்றின் வலியை உலகம் மறக்க
வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க
ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க
தாழ்ந்து இறங்கி எனக்குள் குதிக்க
ஊனும் உயிரும் இசையில் ஒலிக்க 
வா புத்தாண்டே பேரின்பங்கள் கொண்டேன்
கொண்டாடும் இந்நாளில் தந்தோமே பூச்சென்டே

பழங்கதைகளை பேசி பேசி  
மனம் முழுவதும் தூசி தூசி
அதை தொடைத்திட யோசி யோசி
புது கனவுகள் யாசி யாசி
உழைப்பினில் உண்மை வைத்தால்
உண்மையில் உழைப்பு வைத்தால்
உழைப்பினில் உயர்வு தோன்றும்
உயர்வான பாதை தோன்றும்
புதிய வழிகளைக் கண்டதனால்
நேற்று நமதல்லவா.........
புதிய வழிகளைக் கொண்டதனால்
இன்றும் நமதல்லவா.........
சிறு சிறு கண்ணில்
புதுக்கனவுகள் கண்டாள்
நாளை நமதல்லவா...........
நாளை நமதல்லவா...........
நாளும் நமதல்லவா............
கால நதியை ஆள நினைத்தோம்
நீந்திக் கடக்க நெஞ்சம் துடித்தோம்
வானத்திரையில் வண்ணம் தெளித்தோம்
பூமி முழுதும் பூக்கள் விரித்தோம்
புத்தாண்டின் முதல் நாள் இது
புதிதான இசை பூத்தது
ஒலி வெள்ளம் வானத்தை தாக்குது..........

 நான் என்பது நாம் என்றானது
நாம் என்பது நாடு என்றானது
வரும் நாளும் நமதென்றே ஆனது.........
பூமி முழுதும் வெடிகள் வெடிக்க
கோடி இதயம் இணைந்து துடிக்க
காலம் புதிதாய் கதவு திறக்க
நேற்றின் வலியை உலகம் மறக்க
வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க
ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க
தாழ்ந்து இறங்கி எனக்குள் குதிக்க
ஊனும் உயிரும் இசையில் ஒலிக்க
வா புத்தாண்டே பேரின்பங்கள் கொண்டேன்

கொண்டாடும் இந்நாளில் தந்தோமே பூச்சென்டே

No comments:

Post a Comment