Thursday, December 18, 2014

Vellakkara Durai - Nadigar Thilagam Song Lyrics in Tamil

நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத

நீ நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத
போர போக்கில் அவளும் நடிச்சா
எனக்குத் தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக்குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்கப்போறோம்
மூனு ஆஸ்காரு
இன்னும் மூனு ஆஸ்காரு

நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத

ஏய் பாச மலர் பாத்து என்னை
பாலும் பழம் பாத்து என்னை
பாவி புள்ள நடைய பாத்தே பசிமறந்தேனே
பந்த பாசம் பாத்து என்னை
பராசக்தி பாத்து என்னை
கன்னிப்புள்ள குரலக்கேட்டே கதையழந்தேனே
அவ கண்ணாலதானே நானும்
படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னால அன்பைத் தேடி
திரிசூலம் ஆகிப் போனேன்
அவளோட திருவிளையாடலில் தேவர் மகனானேன்
தேவர் மகனானேன் இப்ப தெய்வ மகனானேன்


நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத

ஓ.....மாடி வீட்டு ஏழை போல
மனோகரா சோகம் போல
அன்பு வச்ச மனசில் இப்ப
தொலைஞ்சது சாந்தி
கட்டபொம்மன் வீரம் போல
கை கொடுத்த தெய்வம் போல
விட்டுப்புட்டு அவளும் செல்ல
விளங்கல நீதி
அவ இல்லாதுபோனா வாழ்வில்
விடிவெள்ளிக் கூட தீபம்
அவ பொல்லாத பேச்சைக்கேட்டு
இரவாச்சே நீலவானம்
அவளாலே வணங்காமுடி நான் கூண்டுக்கிளியானேன்
கூண்டுக் கிளியானேன் இப்ப ஞான ஒளியானேன்

நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
போர போக்கில் அவளும் நடிச்சா
எனக்குத் தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக்குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்கப்போறோம்
மூனு ஆஸ்காரு
இன்னும் மூனு ஆஸ்காரு


No comments:

Post a Comment