Thursday, December 18, 2014

Vai Raja Vai - Pachchai Vanna Song Lyrics in Tamil

ஏய் பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இழை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஏ புல்லின் மேலே பாதம்
வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லைக் கேட்ட பின்னே
ஏய் பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்

என் காலொன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாதே
காய் தாங்கும் மரமொன்றை
தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய்
நான் கிளையென்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்

இதயச்சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஏய் நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்
இதயச்சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஏய் நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்
ஏன் வரம் கேட்டேன்


ஏய் என் வீடெங்கும் காடாக்கினாய்
என் காட்டுக்குள் கிளியாகினாய்
கிளியொன்றின் கீச்சாகி
இலையொன்றின் மூச்சாகி
முகிலொன்றின் பேச்சாகி எனை வீழ்கிறாய்
ஆண்கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்

மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்க்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்க்கின்றேன்
நான் துளிர்க்கின்றேன்

பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இழை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஏ புல்லின் மேலே பாதம்
வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லைக் கேட்ட பின்னே
ஏய் பச்சை வண்ணப் பூவே
ஏய் பச்சை வண்ணப் பூவே


No comments:

Post a Comment