Thursday, December 18, 2014

Vellakkara Durai - Ammadi Un Azhagu Song Lyrics in Tamil

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு

முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்டபுள்ள உன்னை நான் பாத்து
சொட்டு சொட்டா கரைஞ்சேனே
ரெக்கைக் கட்டி பறந்த ஆளு
பொட்டிக்குள்ள அடைஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரைபடியாத தாமரை
பூக்குற என்னைத் தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு


கண்ணிரண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஒட்டுமொத்த ஒயிலக்காளை
பத்து சென்மோ எடுப்பேனே
கட்டுசட்டா கனிஞ்ச உன்னை
கட்டிவச்சு ரசிப்பேனே                      
தேசாதி தேசம் வரத் திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனைப்போல பாக்கல
ஹீட்டுல எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு


No comments:

Post a Comment