அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்டபுள்ள உன்னை நான் பாத்து
சொட்டு சொட்டா கரைஞ்சேனே
ரெக்கைக் கட்டி பறந்த ஆளு
பொட்டிக்குள்ள அடைஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரைபடியாத தாமரை
பூக்குற என்னைத் தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
கண்ணிரண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஒட்டுமொத்த ஒயிலக்காளை
பத்து சென்மோ எடுப்பேனே
கட்டுசட்டா கனிஞ்ச உன்னை
கட்டிவச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வரத் திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனைப்போல பாக்கல
ஹீட்டுல எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
No comments:
Post a Comment