Thursday, December 18, 2014

Kaaki Sattai - Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil

காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை கட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனானே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உனை நானே

பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
அதனால் எதை பேசிட தெரியாமல் நான்

கூச்சம் கொஞ்சம் கேட்குது
ஏக்கம் கொஞ்சம் கேட்குது
உயிரோ உனைக் கேட்டிட தருவேனே நான்

அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே
வெயிலும் நீ தானே

ஒரு வார்த்தை உனைக் காட்ட
மறு வார்த்தை எனை மீட்ட
விழுந்தேனே
கலைந்து போனானே
வளைந்து போனாயே


ஓ.....
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச

கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனானே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உனை நானே


No comments:

Post a Comment