Monday, March 24, 2014

Cuckoo - Potta Pulla Song lyrics in tamil

ஒத்த நொடியில தான் எனக்கு சித்தங் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது
நெஞ்சுக் குழியில கவுலி கத்துது
தீக் கங்குல பால் சட்டிய
போல் பொங்குறேனே

ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னைத் தொட்ட்து போல்
தொட்டுவிட்டாள் அழகுரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்த்தான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவச்சா அந்த புள்ள
குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள

நான் வேற சொல்லு இல்ல
நானும் சொல்ல
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே

சொற்களிலே வித்தகாராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால்
ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சக்கரையாம்
அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆட்சி
இப்படி நான் என்ன சொல்ல
சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீலை
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே


No comments:

Post a Comment