Cuckoo - Manasula Soora Kaathey Song lyrics in tamil
மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே
வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற நியாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய்முகம்
ரகசிய யோசனை
கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுடச்சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்
ஆன்ந்தம் பெண்ணாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக்
குயில் போலக் கூவுதே
கைதொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே
மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே
No comments:
Post a Comment