Monday, March 24, 2014

Cuckoo - Kalyanamam Kalyanam Song lyrics in tamil

Cuckoo - Kalyanamam Kalyanam Song lyrics in tamil

காதல் கண்மணியே
கல்யாணமா கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
காதலி பொண்ணுக்குக் கல்யாணம்

ஒண்ணா சிரிச்சு மெய்யா பழகி
கண்ணால் பேசி காத்துக் கிடந்து
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து
உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசி வரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அதனையெல்லாம் மறந்துவிட்டு
பறந்தும் விட்டாளே

காதல் கண்மணியே
கல்யாணமா கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
காதலி பொண்ணுக்குக் கல்யாணம்

காதல் கண்மணியே......
கூறச் சேலை மடிச்சுக்கட்டி
குங்குமப் பொட்ட நெத்தியில் வச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள் காதலிச்சவன் கலங்கி நிப்பான்
அப்புராணியா......
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
கெட்டிமேளம் காது பொளக்க
நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பா ஊரு முன்னாலே
அவள காதலிச்சவன் கதறிடுவான்
ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி சனத்தை வணங்கிகிட்டு
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுக்கிட்டு
பரிசுகூட வாங்கிவப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான்
சந்நியாசியா

ஆ......வகை வகையா சமைச்சு வச்சு
வாழை இலையில் பந்தியுமிட்டு
புருஷனுக்கு ஓட்டிவிடுவோ போட்டோ புடிக்கத்தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்
மங்கள் தாலி கழுத்திலாட
மந்திர வார்த்தை ஐயரு ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்துடுவானே
நடுரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

காதல் கண்மணியே
கல்யாணமா கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
காதலி பொண்ணுக்குக் கல்யாணம்


No comments:

Post a Comment