Monday, March 24, 2014

Cuckoo - Kodaiyila Song lyrics in tamil

Cuckoo - Kodaiyila Song lyrics in tamil

கோடையில மழைபோல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலை இளங்கதிராக
கண் அருகே நீ இருக்க
மாலை வரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ
போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ

காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை.
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உந்தன் கைவிரலால் தொடும்பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
இரண்டு இருதயம் கலந்துவிட

மாறிட யாவும் என்று
சொல்லும் வார்த்தியில் நெசமுமில்லை
உண்மைக் காதலைப் பொறுத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்புத் தீ இன்றும் அணைவதில்லை

உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
இரண்டு இருதயம் கலந்துவிட

கோடையில மழைபோல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலை இளங்கதிராக
கண் அருகே நீ இருக்க
மாலை வரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னுங் கோடி சென்மம்
கூட வரும் உறவோ



No comments:

Post a Comment