காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை கட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே
விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனானே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உனை நானே
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
அதனால் எதை பேசிட தெரியாமல் நான்
கூச்சம் கொஞ்சம் கேட்குது
ஏக்கம் கொஞ்சம் கேட்குது
உயிரோ உனைக் கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே
வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உனைக் காட்ட
மறு வார்த்தை எனை மீட்ட
விழுந்தேனே
கலைந்து போனானே
வளைந்து போனாயே
ஓ.....
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே
விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனானே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உனை நானே
Well writen you can check more Tamil song lyrics
ReplyDelete