நான் நீ நாம் வாழவே
உறவே
நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே
தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்
தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே
உன் பாதை மலராகும்
நதிவாழும் மீன்கூட
ஓர் நாளில் கடலைச் சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைக்கின்றேன்
தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
மணல் காயும் பறையோசை
ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராக நெஞ்சம் இங்கே
பழிதீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய்த் தோன்றிடுமே
அன்பே நீ வாராயோ
தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம் வாழவே
உறவே
நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே
தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்
தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
No comments:
Post a Comment