அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
சதியென்னும் அம்பினால் அது அடிபட்டு மாண்டது
இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயும்
மண்ணுக்குள்ளே
வாழ்ந்த கதை மறைவதில்லை நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை சென்னை மாநகரினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை சென்னை மாநகரினிலே
இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயும்
மண்ணுக்குள்ளே
எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
பிரிந்துவிட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உனை இழந்துவிட்டு
அழுவுகின்றோம் நாங்கள் உரிமையிலே
இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயோ
மண்ணுக்குள்ளே
யார் செயல் உன் உதயம்
யாருக்கும் உன்போல் இல்லை இதயம்
எளிமையாய் வாழ்ந்து
ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
எளிமையாய் வாழ்ந்து
ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
புரட்சி செய்ய புறப்பட்டதே அன்பே உன் பயணம்
நீ புதுமை பல செய்வதற்குள் உனக்கா இம்மரணம்
இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை மறந்து சென்றாய் நீயோ
மண்ணுக்குள்ளே
No comments:
Post a Comment