Wednesday, June 25, 2014

Madras - Irandhidava Song Lyrics in Tamil

அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
சதியென்னும் அம்பினால் அது அடிபட்டு மாண்டது

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயும் மண்ணுக்குள்ளே
வாழ்ந்த கதை மறைவதில்லை நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை சென்னை மாநகரினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை சென்னை மாநகரினிலே

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயும் மண்ணுக்குள்ளே

எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ

பிரிந்துவிட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உனை இழந்துவிட்டு
அழுவுகின்றோம் நாங்கள் உரிமையிலே

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயோ மண்ணுக்குள்ளே

யார் செயல் உன் உதயம்
யாருக்கும் உன்போல் இல்லை இதயம்

எளிமையாய் வாழ்ந்து
ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

எளிமையாய் வாழ்ந்து
ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

புரட்சி செய்ய புறப்பட்டதே அன்பே உன் பயணம்
நீ புதுமை பல செய்வதற்குள் உனக்கா இம்மரணம்

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை மறந்து சென்றாய் நீயோ மண்ணுக்குள்ளே


No comments:

Post a Comment